காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலி.. பரிதாபமாக பலியான விவசாயி... காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், தல வாரம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது குத்தகை நிலத்தில் நிலக்கடலை பயிர் இட்டிருந்தார். நள்ளிரவில் அவரது நிலத்தை காட்டு பன்றிகள் சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.

இதனால் காட்டுப்பன்றிகளை விரட்ட ராமசாமி நிலத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது.  தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்த அவர் கால் இடறி மின்வேலியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer Electorate Near Kanjipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->