பெரம்பலூர்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - விவசாயி கைது - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் இரூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் விவசாயி மதுபாலன் (28). இவர் 6 வயதுடைய சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிறுமியை மதுபாலனிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மதுபாலன் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மதுபாலனை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer arrested for sexually harassing a girl in Perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->