ஆன்லைன் ரம்மியால் வந்த வினை: திருப்பதி அருகே மனைவி, தாயைக் கொன்றுவிட்டு இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்த தொழிலதிபர்! - Seithipunal
Seithipunal


திருப்பதி மாவட்டம் நாராயணவனம் அருகே ஆன்லைன் ரம்மி மற்றும் லாட்டரி மோகத்தால் ஏற்பட்ட கடன் சுமையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நாராயணவனத்தைச் சேர்ந்த சிமெண்ட் கடை உரிமையாளர் மோகன், தனது மனைவி ஹரிதா மற்றும் தாய் சந்திரகலா ஆகியோரை வீட்டில் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்.

குழந்தைகள் மீட்பு: அதன் பின், தனது மகன் கவுசிக் மற்றும் மகள் ஹரிணி படிக்கும் பள்ளிக்குச் சென்று, உறவினர் இறந்துவிட்டதாகப் பொய் கூறி அவர்களைத் தனது பைக்கில் அழைத்துச் சென்றார்.

ரயிலில் பாய்ந்து தற்கொலை: குழந்தைகளை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்குச் சுற்றிய மோகன், இரவு வேப்பங்குண்டா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்துத் தற்கொலைக்கு முயன்றார். தந்தை தடுத்த குழந்தைகளையும் ரயில் மோதியதில், மோகன் உட்பட மூன்று பேரும் உடல் சிதறி பலியாகினர்.

காரணம்:  மோகன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுப் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார். கடனை அடைக்க இரண்டு வீட்டு மனைகளை விற்றதோடு, மனைவியின் நகைகளையும் அடமானம் வைத்துள்ளார்.

மேலும், ரூ.20 லட்சத்திற்கு லாட்டரி வாங்கிப் பணம் இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னணி: ரயில்வே வேலையை விட்டுவிட்டுத் தொழில் செய்து வந்த மோகன், இந்தச் சூதாட்ட மோகத்தால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family Tragedy Private Company Manager Commits Suicide After Killing Partner and Son


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->