பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு.! கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பூண்டி ஏரியில் இருந்து 10000 கன அடி உபரி நீர் திறக்கபடுவதால் கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excess water release in Bundi lake warns of flood risk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->