பிறந்து 2 மாதமேயான பச்சிளம் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை.. ஈரோட்டில் அதிர்ச்சி.!!
Erode child baby sexual torture by father
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தை சார்ந்தவர் துளசிமாதன். இருக்கு பவானி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயதுடைய மகன் மற்றும் பிறந்து 65 நாட்கள் ஆன பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், பவானி மகளிர் சுய உதவி குழுவிற்காக பணம் செலுத்த சென்ற நிலையில், கணவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள கூறி சென்றுள்ளார். பவானி வீட்டிற்கு சென்ற நேரத்தில் தந்தையால் பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு வழங்கப்படுவதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து கணவனிடம் இருந்து குழந்தையை மீட்ட பெண்மணி, அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கணவரின் மீது பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து துளசிமாதனை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode child baby sexual torture by father