பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு.. மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மே 6ம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் பொறியியல் கல்லுரிகளில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக 2.24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் நடப்பாண்டில் 13 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசையை முடிவு செய்வதற்கான ரேண்டம் என் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 2ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Engineering councelling random no tomorrow release


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->