குப்பை குவியலுக்கு முற்றுப்புள்ளி...? கொடுங்கையூரில் 44 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்...! - Seithipunal
Seithipunal


பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களுடன் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னையில் குப்பைகளை முறையாக கையாளுதல், தரம் பிரித்து சேகரித்தல், குப்பைக் கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளின் நிலவரத்தை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,"தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக, அதிக அளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை முறையாகப் பிரித்து வழங்க வேண்டும்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என ஒவ்வொரு வகை கழிவுகளையும் தனித்தனியாக சேகரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதனை கண்காணிப்பதற்காக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கும் இதுகுறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குப்பைகளை சேகரிப்பதற்கான தொட்டிகள், குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் வளாகங்களின் உள்ளேயே வைக்கப்பட வேண்டும். அங்கிருந்து குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும்.வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் அதிக அளவில் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்தே வழங்க வேண்டும்.

விதிகளை பின்பற்றாதவர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களிலும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையின் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.தற்போது இரண்டாம் கட்டமாக 5.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 28 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 44 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் 16 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து, விரைவாக நிறைவு செய்ய வேண்டும்.அத்திப்பட்டு குப்பைக் கிடங்கில் முதற்கட்டமாக உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையின் மூலம் 1 லட்சம் கன மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

தற்போது இரண்டாம் கட்டமாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 36 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது முதல் குப்பைக் கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவது வரை அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, நகரின் தூய்மையை மேலும் மேம்படுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

end garbage pile 44 lakh metric tons waste removed Kodungaiyur


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->