#மக்களே உஷார்... சார்ஜர் போட்ட போது தீபிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஈரோட்டில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சார்ஜர் போட்ட போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கூரியர் அலுவலகம் நடத்தி வருபவர் சிவப்பிரகாசம். இவர் நேற்று மாலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜர் போட்டுள்ளார். இதையடுத்து, திடீரென வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தீயானது அங்கிருந்து பார்சல் மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்துள்ளது.

இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் பார்சல்கள் மற்றும் வணிக வளாகத்தில் இருந்த இரண்டு மின் மோட்டார்கள் தீயில் கருகின.

மேலும் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric scooter that caught fire while charging in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->