ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தவேண்டும் என்று புகார் வந்ததா? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே வாக்குப்பதிவுக்கு உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் பிரஷர் குக்கரும், அதிமுகவினர் கொலுசையும் வினியோகம் செய்துவருவதாக  புகார் எழுந்துள்ளது. 

மேலும், டாஸ்மாக் பணம் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். பிரஷர் குக்கர், கொலுசு விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது தேர்தல் பறக்கும்படை சோதனை மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிகள் தேர்தல் பறக்கும் படையினரோடு, போலீசாரும், துணை ராணுவத்தினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் இதுவரை 61 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வந்தாலும், இடைத்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election commission TN Head Say About Erode BY Election 2023


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->