#விழுப்புரம் || குடிபோதையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


குடி போதையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி செந்தில்(45). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் இந்த தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான செந்திலின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து நேற்று இரவு மீண்டும்  குடிபோதையில் வீட்டிற்கு வந்த செந்தில், தனது செல்போன் மூலமாக மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்திலின் மனைவி, கணவர் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் செந்திலை பார்த்தபோது, அவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டிருந்ததையடுத்து, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் செந்தில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drunk worker commits suicide by hanging himself in Villupuram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->