பூட்டிய வீட்டிற்குள் கிடந்த ஓட்டுநர் சடலம்: கொலையா? துப்புதுலக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, கோட்ட சாதனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் பாலாஜி (வயது 35) இவர் ஓட்டுனராக இருந்தார். 

இவரது மனைவி ராதா. இவர்களுக்கு விஷ்ணு, ஜோதி மூர்த்தி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே   இருந்து வந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இதில் பாலாஜி தனியாக வசித்து வந்த வீட்டில் இன்று காலை 7 மணி அளவில் துர்நாற்றம் வீசியது இதனை உணர்ந்த அக்கம்  பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வீடு வெளிப்புறமாக பூட்டி இருந்தது. அதனை போலீசார் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாலாஜி உடல் பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. 

அதனை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை யாராவது கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

driver found mysteriously dead inside house police investigation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->