அது வன்னியர்களின் சொத்து! கையை வச்சீங்க., தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Say About Alavandar Trust Vanniyar land issue
செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்ததாவது, "மகாபலிபுரம் அடுத்த நெமிலி பகுதியில் 'ஆயிரம் காணி ஆளவந்தார்' அவருடைய அறக்கட்டளை சார்ந்த நிலங்களை, தமிழக அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்கள் முழுமையாக வன்னியர்களுடைய சொத்து. ஆளவந்தார் அவருடைய உயிலில் இந்த 1330 ஏக்கர் நிலம் வன்னியர்களுக்கு சொந்தமானது. வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக அதனை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த நிலத்தை அறநிலையத்துறையை சார்ந்தவர்கள் 60 ஏக்கர், 50 ஏக்கர், நூறு, இருநூறு ஏக்கர் என்று பங்கு போட்டு பிரித்து தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த சொத்து வன்னியர்களின் சொத்து. வேறு எந்த எதற்காகவும் இதனை பயன்படுத்தக் கூடாது. இந்த அறக்கட்டளையின் கீழ் தான் இந்த சொத்துக்கள் இருக்க வேண்டும். இதனை யாருக்கும் கொடுக்கவும் கூடாது. ஒரு சென்ட் நிலம் கூட வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. அப்படி மீறி கொடுத்தால், பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் கடுமையான போராட்டத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இதனை தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு எச்சரிக்கையாக கொடுக்கிறோம்" என்றார்.

மேலும், "காவல்துறைக்கு உளவியல் ரீதியாக ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். கோவையில் டிஐஜி விஜயகுமார் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு என்ன காரணம் என்று முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
அவரின் மரணம் குறித்து வருகின்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. குடும்ப சூழல் சம்பந்தமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறலாம் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மனநிலை குறித்தும் வதந்திகள் பரப்பப்படுகிறது. அவருடைய தற்கொலை உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இது போன்ற சம்பவம் காவல் துறையில் நடக்கக்கூடாது. இனியும் நடக்கக்கூடாது.
அதிக பணி சுமை காரணமாக சில காவலர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்ற கலாச்சாரம் அண்மையில் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுபடுத்த காவல்துறையினருக்கு பணி சுமையை குறைக்க வேண்டும். உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார் .
English Summary
Dr Anbumani Ramadoss Say About Alavandar Trust Vanniyar land issue