சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்.! அத்துமீறிய மருத்துவர் - திருப்பத்தூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்.! அத்துமீறிய மருத்துவர் - திருப்பத்தூரில் பரபரப்பு.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போஸ்கோ நகரை சேர்ந்த இளம்பெண். ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு இருந்த மருத்துவர் தியாகராஜன், அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்கினர். 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் மருத்துவர் தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் மருத்துவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

doctor arrested for harassment to woman in tirupathur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->