கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி? அமைச்சர் தங்கம் தென்னரசு!
DMK Minister Thangam Thennarasu central government Keezhadi report.
கீழடியில் 2014-ல் தொடங்கிய அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அந்த தொடக்க அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் மற்றும் நகர அமைப்புக்கான சான்றுகள் கிடைத்தன.
ஆய்வுகள் மூலம் அவை 2,800 ஆண்டுகள் பழமையானவை என உறுதி செய்யப்பட்டது. ஆய்வை நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றமளிக்கப்பட்ட பின்னர், அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறைக்கு வந்தது.
தற்போதுவரை 10 கட்டங்களாக பணிகள் நடைபெற்று, ஒவ்வொரு கட்டத்திற்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், முதல் இரு கட்டங்களுக்கான அறிக்கை இன்னும் வெளிவராததோடு, அதனை திருத்தி சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து அறிக்கையை உடனே வெளியிடக் கோரும் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
DMK Minister Thangam Thennarasu central government Keezhadi report.