கல்லால் அடித்து தி.மு.க பிரமுகர் கொலை.! தஞ்சையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தேவராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் அண்ணாமலை (55). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சபாபதி. இந்நிலையில் அண்ணாமலை போட்டு இருந்த வேலியை சபபதி மனைவி ராதா சேதப்படுத்தியுள்ளார். மேலும் அண்ணாமலை குடும்பத்தினரை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனை அண்ணாமலை, தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சபாபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் அண்ணாமலையை கல்லால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்ணாமலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK executive murder by stoning in Thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->