திண்டுக்கல்: அரசு பேருந்து மோதி இளம்பெண், இளைஞர் பலி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சாணார்பட்டி அருகே பூவன்கிழவன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 24) மற்றும் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் புவனேஸ்வரி (வயது 22) ஆகியோர் வடமதுரை அருகிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இன்று காலை, பூவன்கிழவன்பட்டியில் இருந்து பணிக்குச் செல்லும் போது, பாலசுப்பிரமணி தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

அவர்கள் கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்து சாலை கடக்க முயன்றபோது, திண்டுக்கலிலிருந்து நத்தம் நோக்கி வேகமாக வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தை மோதி கவிழ்த்தது. இதில் இருவரும் தரையில் விழுந்து தீவிரமாக காயமடைந்தனர்.

அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து சாணார்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து, பேருந்து ஓட்டுநரை குறிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul bus bike accident


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->