#தருமபுரி || பேருந்து நிலையத்தில் நாடக காதலன் அராஜகம் - சிறுமியின் துப்பட்டாவை இழுத்து ஆசிட் வீசுவதாக மிரட்டல்,! - Seithipunal
Seithipunal


தன்னை காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீசி விடுவேன் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்றும் 17 வயது சிறுமியை மிரட்டிய நாடக காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக சிவாடி பேருந்து நிலையத்தில் வந்த அந்த சிறுமியை தடுத்து நிறுத்திய சிவாடி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சஞ்சய் (25 வயது) என்ற நாடக காதலன், மாணவியின் துப்பட்டாவை பிடித்து தன்னை காதலிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளான்.

மேலும் தன்னை காதலிக்க மறுத்தால், எந்த நேரத்திலும் உன் முகத்தில் ஆசிட்டை வீசுவேன் விடுவேன் என்றும், பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன் என்றும் அந்த நாடக காதலன் மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து மாணவி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நாடக காதலன் சஞ்சயை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri sivadi dreama lover rude


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->