Swachh Bharat : தூய்மை திட்டத்தில் தமிழக அரசின் அடுத்த கட்டம் : உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
Deputy Chief Minister udhayanithi stalin Swachh Bharat
தூய்மைபணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
****
சென்னையில் நடைபெற்ற தூய்மை மிஷன் திட்டத்தின் ஆய்வுக்கூட்டத்தைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அரசு அலுவலகங்களில் தொடங்கிய தூய்மை திட்டம், விரைவில் வீடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் திட்டம் விரிவாக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் வகையில், சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
முறையான விதிமுறைகளுடன் குப்பை அகற்றம் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை முழுமையாக தூய்மையான மாநிலமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைமுறையில் உள்ளதாக உதயநிதி தெரிவித்தார்.
English Summary
Deputy Chief Minister udhayanithi stalin Swachh Bharat