ஓடும் ரயிலில் மனைவியிடம் கொள்ளை: தடுத்து நிறுத்த முயன்ற டாக்டர் கை துண்டாகிய கொடூரம்..!:
Doctor loses hand after trying to stop man from stealing wifes handbag on moving train
ஓடும் ரயிலில் பெண் டாக்டர் ஒருவரிடம் நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். அதனை தடுத்த முயன்ற கணவர், தவறி விழுந்ததில் அவரது கை துண்டாகியுள்ளது. நேற்று, மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த டாக்டர் தம்பதியான 50 வயதான யோகேஷ் தேஷ்முக், மனைவி தீபாலி தேஷ்முக், 44 வயது மற்றும் அவர்களது 09 வயது மகளுடன் குர்லாவில் இருந்து நான்டெட்டுக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ரயில் காஞ்சுமார்க் - பாண்டூப் இடையே சென்றபோது திடீரென தீபாலி வைத்திருந்த ஹேண்ட்பேக்கை கொள்ளைக்காரன் பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது, தீபாலி கெட்டியாக பேக்கை பிடித்திருந்ததால், அவரை ரயில் பெட்டியின் கதவு வரை கொள்ளைக்காரன் இழுத்து சென்றுள்ளான்.

இதை பார்த்த யோகேஷ் கொள்ளையனை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அந்த நிலையில் தம்பதியர் இருவரும் தவறி, ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர். இதில் தேஷ்முக்கின் ஒரு கை, ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டாகியுள்ளது. தீபாலி லேசான காயங்களுடன் தப்பியுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் கொள்ளையன் தீபாலியிடம் இருந்த ஹாண்ட் பேக்குடன் தப்பி சென்றுள்ளான். அந்த பேக்கில் 5,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியே வேனில் சென்ற நபர் ஒருவர் ரயிலை இருந்து விழுந்த டாக்டர் தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ரயில் தனியே இருந்த 09 வயது மகள் பாதுகாப்பாக கல்யாண் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையனை தேடி வருவதாக கூறியுள்ளனர்.
English Summary
Doctor loses hand after trying to stop man from stealing wifes handbag on moving train