பட்டுக்கோட்டை பத்து ரூபாய் மருத்துவர்” ரத்தினம் மறைவு! வேதனையில் மக்கள்!
Pattukottai Doctor Social service death
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த “பத்து ரூபாய் மருத்துவர்” ரத்தினம் (வயது 96) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த ரத்தினம், 1959ல் மருத்துவ பணியைத் தொடங்கி, தொடக்கத்தில் ரூ.2, பின்னர் ரூ.10 மட்டுமே வசூலித்து பொதுமக்களுக்கு சேவை செய்தார். வாழ்க்கையின் இறுதி வரையும் கட்டணத்தை உயர்த்தாமல் மருத்துவம் பார்த்து வந்ததால், அவர் பகுதி மக்களிடம் "பத்து ரூபாய் மருத்துவர்" என பெருமையாக அழைக்கப்பட்டார்.
1929ல் பிறந்த ரத்தினத்திற்கு மனைவி ராஜலட்சுமி, ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அவரது மரணம் பட்டுக்கோட்டை மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் ஜூன் 8 அன்று அடக்கம் செய்யப்படும். அவரது மறைவுக்கு தினகரன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
English Summary
Pattukottai Doctor Social service death