2026-ல் ரூ.500 நோட்டுகள் செல்லதா? வதந்திகளை நம்ப வேண்டாம் - மத்திய அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மார்ச் 2026க்குள் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதை மத்திய அரசு முற்றிலும் பொய்யானது என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த தகவல் குறித்து *பத்திரிகை தகவல் பணியகம் (PIB)* பதிலளித்து, “மக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.

‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோவில், ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த வீடியோ 4.5 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், PIB உண்மைச் சோதனை துறை அந்த தகவல் தவறானது என உறுதி செய்தது.

இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.500 நோட்டுகளைப் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், அவை தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில், ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தவறாக புரிந்து, வதந்தி உருவானதாக கருதப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும், போலியான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reserve bank 500 rupee demonetization Rumor 


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->