இனி 10 மணிநேரம் பணி! ஆந்திரா மாநிலத்தில் புதிய சட்டம்! போராட்டத்தை அறிவித்த தொழிலாளர்கள் சங்கங்கள்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில், வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்க NDA அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் முதலீட்டாளர்களையும் தொழிலாளர்களையும் கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்தார்.

முந்தைய சட்டப்படி, 5 மணி நேர வேலைக்கு 1 மணி நேர ஓய்வு வழங்கப்பட்டது. இப்போது, 6 மணி நேரத்திற்கு ஓர மணிநேர ஓய்வு வழங்கப்படும். கூடுதலாக, ஒரு தொழிலாளர் ஒரு காலாண்டில் செய்யக்கூடிய ஓவர்டைம் 75 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள், முதலீட்டுகளை ஈர்க்கும் விதமாகவும், தொழிலாளர் நலனுக்கு உகந்த வகையிலும் இருக்குமென அரசு விளக்கம் அளித்துள்ளது. உலகளாவிய தொழில் சூழலுக்கு ஏற்பவே இந்த மாற்றங்கள் எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக தடை செய்யப்பட்டிருந்த பெண்கள் இரவுநேர வேலைக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்மதம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் இருந்தால், பெண்கள் இரவுநேர ஷிப்ட்களில் பணியாற்றலாம். இது பெண்கள் முன்னேற்றத்தையும் பாலின சமத்துவத்தையும் ஊக்குவிக்கும் என அமைச்சர் கூறினார்.

மறுபுறம், இந்த மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜூலை 9ஆம் தேதி அகில இந்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த உள்ளன என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra Work time increase 10 hrs


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->