அமெரிக்கா- சீனா வர்த்தக போர் எதிரொலி: ஜூன் 09-இல் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை; டிரம்ப் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும்  சீனா இடையே ஜூன் 09-ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அதிக வரி விதிக்க தொடங்கியதால் இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக போர் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து, சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னர்  சீனா வர்த்தக ஒப்பந்தத்தை மீறிவிட்டது என டொனால்ட் டிரம்ப் சீனாவை குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையின் பிரதிநிதிகள் ஜூன் 09-ஆம் தேதி லண்டனில் சீன அமைச்சரவை உடனான சந்திப்பில்  வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் ஜூன் 09-ஆம் தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக் கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump announces trade talks between US and China on June 9th


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->