மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்ற காரிலிருந்து பாதிரியார் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை..!
Priests body recovered from car parked in vacant lot near Madhurantakam
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் கிளியாற்று பாலம் அருகே உள்ள காலி இடத்தில், 'கியா' கார் ஒன்று, நேற்றுமுன்தினம் மாலை முதல், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. காருக்குள், ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக மதுராந்தகம் போலீசார் தகவல் கிடைத்ததில் அவர்கள் அங்கு சென்றனர்.
கார் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், கார் ஓட்டுநர், அவரது இருக்கையில் சாய்ந்தபடி, இறந்து கிடந்துள்ளார். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த பின்னர், போலீசார் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர் காரின் இறந்த நிலையில் இருந்த ஓட்டுநர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காரை சோதனை செய்ததில் மதுவுடன் தண்ணீர் கலந்த பாட்டிலும் அங்கு இருந்துள்ளது.

குறித்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்த போது, மேல்மருவத்துார் அருகே உள்ள அகிலி கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ், 42, என்பதும், அச்சிறுபாக்கம் அருகே உத்தமநல்லுார் சர்ச்சில், பாதிரியாராக இருப்பவர் என்று தெரிய வந்துள்ளது.
அவர் அச்சிரும்பாக்கத்தில் இருந்து அதிக மதுபோதையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி காரில் புறப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதை அதிகமானதால் நிதானம் தடுமாறிய நிலையில், கிளியாற்று பாலம் அருகே காலி இடத்தில் காரை நிறுத்திய அவர் கதவுகளை மூடிக் கொண்டு துாங்கி இருக்கலாம். அப்போது அவருக்கு மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இருந்து இது குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Priests body recovered from car parked in vacant lot near Madhurantakam