ரூ.4 கோடி டெண்டர் மோசடி வழக்கு: தெலங்கானா இளைஞரைச் சென்னையில் கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!
Cyber Crime Police Arrest Telangana Man in 4 Cr Tender Fraud Case Key Mule Account Holder Held
சென்னை வானகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயந்திபாபு என்பவரிடம், பிரபல நிறுவனத்தில் ₹4 கோடி மதிப்பிலான தானியங்கி கதவுகள் அமைக்கும் டெண்டர் எடுத்துத் தருவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். வைப்புத் தொகை என நம்பவைத்து, பல தவணைகளில் மொத்தம் ₹12.70 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு அந்த நபர் தலைமறைவானார்.
சைபர் கிரைம் விசாரணை & கைது
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்திபாபு, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மோகிலிகிட்டா மகேஷ் (33) என்பவருடையது என்பது தெரியவந்தது.
இதையடுத்து தெலங்கானா சென்ற தனிப்படை போலீசார், அங்குள்ள மொய்னாபாத் காவல்துறையின் உதவியுடன் மகேஷைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அம்பலமான உண்மைகள்
கைதான மகேஷ் ஆன்லைன் சேவை மையம் (CSC) நடத்தி வந்தவர். பிரதான மோசடிக் கும்பலிடம் இருந்து ஜெயந்திபாபு அனுப்பிய ₹12.70 லட்சத்தைப் பெற்று, அதை அவர்களிடம் ஒப்படைப்பதற்காக ₹2.75 லட்சம் கமிஷனாகப் பெற்றுள்ளார். தனது வங்கிக் கணக்கை மோசடிக்கு வாடகைக்குக் கொடுத்தது (Mule Account) விசாரணையில் உறுதியானதை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவழக்கில் தொடர்புடைய முதன்மை நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
Cyber Crime Police Arrest Telangana Man in 4 Cr Tender Fraud Case Key Mule Account Holder Held