#BREAKING | கடலூரில் கொடூர விபத்து! உடல் நசுங்கி பலியான சிறுமி! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே சாலையை கடக்கும் முயன்ற மூன்று வயது குழந்தை மீது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியின் வாகனம் ஒன்று இன்று காலை, கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரம் கிராமத்திற்கு சென்று, குழந்தைகளை ஏற்றுக்கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மூன்று வயது குழந்தை தேஜஸ்வரன், சாலையை கடக்க வந்துள்ளார்.

அந்த வழியாக வந்துகொண்டிருந்த தனியார் பள்ளி வாகனம் குழந்தையின் மீது மோதி, குழந்தையின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளியின் வாகன ஓட்டுனர் தப்பி தலைமறைவாகிவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cuddalore School Van accident march 2023


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->