#BigBreaking: கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்டர்.. காலையிலேயே கடலூர் காவல்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், கடலூரில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

கடலூரில் பழக்கடை நடத்தி வந்த வீரா. இவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பண்ரூட்டி மலட்டாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். 

இந்நிலையில், மலட்டாறு பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில், மர்ம கும்பல் வாகனத்தில் வந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், காவல் துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளது. 

இதன்போது, காவல் அதிகாரிகள் பாதுகாப்பு கருதி மர்ம கும்பல் மீது துப்பாக்கிசூடு நடத்தவே, மர்ம கும்பலை சார்ந்த கிருஷ்ணா என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Police Encounter Culprit Krishna As per Murder Case


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->