கடலூரில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கள்ளக்காதலன்! பிணத்துடன் உலாவிய தாய்! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே, 3 வயது குழந்தையை கொலை செய்த விவகாரம் பகிரங்கமானது. குழந்தையின் சடலத்துடன் சுற்றித்திரிந்த தாயை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தத் தாயுடன் தகாத உறவில் இருந்த ஒருவரே, குழந்தையை பலவந்தமாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி, தொடர்ந்து வன்முறையாக தாக்கி கொன்றது தெரியவந்தது. அந்த சிறுமி தினமும் வன்கொடுமைக்கு உள்ளாகி வந்ததாகவும், கடைசியில் தாக்குதலால் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலத்தில் இருந்த காயங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலுக்கான தெளிவான ஆதாரங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தப் பகீர் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொடூரம் செய்த குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cuddalore 3 years old child abuse and kill


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->