காவிரி ஆற்றில் மூழ்கி தம்பதி பலி.! குழந்தைகள் கண் முன்னே நிகழ்ந்த துயரம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் கண்முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி ஜனார்த்தனன்(27). இவரது மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜனார்த்தனன் நேற்று குடும்பத்துடன் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்பொழுது மோளப்பாறை பகுதிக்குச் சென்ற இவர்கள், குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். இதையடுத்து மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த கணவன்-மனைவி இருவரும் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதனால் கரையில் இருந்த குழந்தைகள் இருவரும் ஆற்றைப் பார்த்து கத்தியுள்ளனர். மேலும் கணவன்-மனைவி இருவரும் அபாய குரல் எழுப்பியடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கணவன்-மனைவியை மீட்க முயன்றனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து நீண்ட நேரத் தேர்தலுக்குப் பின்பு கணவன் மனைவி இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple drowned in Cauvery river in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->