பல பெண்களுடன் தொடர்பு.. போலீஸ் ஏட்டு மீது மனைவி பரபரப்பு புகார்!
Connection with many women Wife files a sensational complaint against the police
பல பெண்களிடம் போலீஸ் ஏட்டு தொடர்பில் இருப்பதாக கூறி மனைவி அவர் மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .
திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் ,35 வயதான இவர் பழனி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் ,20 வயதான வினோதினி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்திவந்தனர்.இந்தநிலையில் கணவன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது மனைவிக்கு.
திருமணமான ஒரு வாரத்திற்குள்ளேயே பார்த்திபனின் நடவடிக்கை சரிலில்லாததால் அதை வினோதினி, அன்றாட செயல்பாட்டை கண்காணித்து வந்தார்.இந்தநிலையில் பார்த்திபனின் செல்போனை எடுத்து வினோதினி பார்த்தபோது இதில் பார்த்திபன் அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பல பெண்களிடம் பேசி இருந்ததையும், ஆபாச படங்கள் வைத்திருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்.இதனால் ஆத்திரத்தில் இது குறித்து பார்த்திபனின் குடும்பத்தினரிடம் மனைவி வினோதினி கூறியுள்ளார்.
இதனால் குடும்பத்தினர்கள் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக வினோதினியை பார்த்திபன் குடும்பத்தினர் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளனர்.மேலும் மனவேதனையில் இருந்த மனைவி வினோதினி இதுகுறித்து அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் ெகாடுத்தார்.

புகாரின் பேரில் ஓட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் பாத்திபன், அவரது தாய் கண்ணம்மாள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கணவன் பார்த்திபன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன்னிவாடி போலீஸ் நிலையத்திற்குட்ட பகுதியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டு முன் ஜாமீன் பெற்றிருந்தார்.இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மனைவி வினோதினி போலீசாருக்கு அழுத்தம் கொடுக்க தினமும் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு பார்த்திபனை வினோதினி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் கைது செய்தனர்.
English Summary
Connection with many women Wife files a sensational complaint against the police