பெரம்பலூரில் சோகம்.! கல்லூரி மாணவரின் உயிரை பறித்த டாட்டூ .! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் சோகம்.! கல்லூரி மாணவரின் உயிரை பறித்த டாட்டூ .!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரத். கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.

இதையடுத்து ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு பாதிக்கப்பட்டதுடன், கை அக்குள் பகுதியில் நெரிகட்டியது. இதனால் வலி தங்க முடியாமல் துடித்த பரத்தை அவரது பெற்றோர், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினர். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அதற்குள் பரத் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் டாட்டூ குத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று டாட்டூ குத்துபவர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் பரத் டாட்டூ குத்தியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died for tattoo in perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->