அடுத்தடுத்து உயிரிழந்த பெற்றோர்... சோகத்தில் கல்லூரி மாணவர் எடுத்த முடிவு.. தஞ்சையில் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து பெற்றோர் உயிரிழந்த நிலையில் மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாண்டியன். இவரும், இவரது மனைவியும் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களது 2 மகன்கள் அதே பகுதியில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி இருந்தனர். இதில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மூத்த மகன் வீர அரசன் (26) கடந்த சில நாட்களாக பெற்றோர் இறந்த சோகத்தில் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கரையான் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மயங்கி கிடந்த வீர அரசனை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீர அரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student commits suicide in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->