வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ்... கல்லூரி மாணவர் விபரீத முடிவு..! ஈரோட்டில் சோகம்...!
College student commits suicide in erode
ஈரோடு மாவட்டத்தில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் தயானந்தன் (20) அதே பகுதியில் உள்ள அத்தை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தயானந்தன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் இறந்து விடப்போவதாக வைத்துள்ளார். இந்த வாட்ஸ்-அப் ஸ்டேட்டசை தயானந்தனின் அத்தை மகன் யுவராஜ், தனது செல்போனில் பார்த்துள்ளார்.
இதையடுத்து, யுவராஜ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து அனைவரும் தயானந்தன் தங்கியிருந்த அறை கதவை தட்டியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை என்பதால் ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து உடனடியாக கதவை உடைத்துக் கொண்டு தயானந்தனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்த தயானந்தன் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
College student commits suicide in erode