அதிகாலை சோகம்: காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர். ஆலந்துறை செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 73) இவர் கூலி தொழிலாளி. இன்று அதிகாலை சுமார் 4:30 மணி அளவில் இவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். 

அப்போது அந்த வழியாக வந்த ஒற்றைக் காட்டு யானை கருப்பனை தாக்கி தனது தும்பி கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பன் வலி தாங்காமல் கத்தி கூச்சலிட்டுள்ளார். 

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று யானையை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக வனப் பணியாளர்கள் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த கருப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore wild elephant attacked old man died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->