"நற்கருத்துக்களை போதித்த கருணாமூர்த்தியான இயேசு"..!! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து..!! - Seithipunal
Seithipunal


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இத்திருநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு மு.க ஸ்டாலின் கிறித்துவ மக்களுக்கு தனது ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "உலக மக்களின் நலனுக்காக நற்கருத்துக்களை போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிருத்துவ மக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். 

அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந் நன்னாளில் உறுதியேற்போம்" என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MKStalin congratulated Christians on Easter


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->