பெற்றோரின் அலட்சியம்.. பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.!!
Child baby died in chennai
சென்னையில் உள்ள கொத்தவால்சாவடி சின்னதம்பி தெரு பகுதியைச் சார்ந்தவர் ஜெஸீம் சர்தார் உசேன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், இவருக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வயதுடைய பாத்திமா என்ற பெண் குழந்தையானது இருக்கிறது.
கடந்த 26 ஆம் தேதி மாலை நேரத்தில் குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் சமையலறையில் இருந்துள்ளார். படுக்கை அறையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, சிறிது சிறிதாக நகர்ந்து குளியலறைக்குள் சென்றுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
குளியலறையில் தனது உயரம் கொண்ட வாளியில் ஏற முடியாமல் அருகில் இருந்த துணி துவைக்கும் சிறிய இருக்கையை பாதியளவு பிடித்து ஏறி எட்டிப்பார்த்த சமயத்தில், குழந்தை பரிதாபமாக உள்ளே விழுந்துள்ளது. இந்த நிலையில், குழந்தையை காணவில்லை என்று வீடு முழுவதும் தேடி நிலையில் இறுதியாக குளியல் அறையை கவனித்துள்ளனர்.
இதில் குழந்தை வாளியில் தலைகீழாக மிதந்த நிலையில், குழந்தை மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அங்குள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குடும்பத்தினரின் அலட்சியத்தால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tamil online news Today News in Tamil
English Summary
Child baby died in chennai