முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி செல்கிறார்!
Chief Minister Stalin is going on a two day tour to Trichy
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுதினம் திருச்சி செல்கிறார். வரும் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு விமான மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து காட்டூர் செல்கிறார். பின்னர் காலை 10:30 மணி அளவில் காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடைபெறும் அறிவியல் நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
அதன்பின் அங்கிருந்து புறப்படும் மு.க ஸ்டாலின் பெரம்பலூர் சென்று பகல் 12:30 மணியளவில் கோத்தாரி நிறுவனத்தின் புதிய ஆலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்நிகழ்ச்சி முடித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மாளிகையில் அன்று இரவு ஓய்வு எடுக்கிறார்.
அதன் பின்னர் வரும் 29ஆம் தேதி காலை 9:30 மணியளவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர் காலை 10:45 மணிக்கு அரியலூரில் இருந்து திருச்சிக்கு சென்று அங்கிருந்து பகல் 12:30 மணி அளவில் சென்னைக்கு திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளாதால் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
English Summary
Chief Minister Stalin is going on a two day tour to Trichy