குடியரசுத் துணைத் தலைவருக்கு தனியார் உணவகத்தில் இரவு விருந்து அளித்த முதலமைச்சர் ரங்கசாமி!
Chief Minister Rangasamy hosted a dinner for the Vice President at a private restaurant
அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் ரங்கசாமி தனியார் உணவகத்தில் இரவு விருந்து அளித்தார்.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம். அமைச்சர்கள்- ஜெயக்குமார், சரவணன் குமார், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கரன், வெங்கடேசன், ராமலிங்கம், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மூன்று நாள் பயணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளது இந்திய துணை ஜனாதிபதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி விருந்தினர் மாளிகையில் தங்குவதால் 15,16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் அந்த பகுதி முழுவதும் பொது மக்கள் நடமாட தடை விதிக்க பட்டு, மத்திய துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள வீடு இல்லா நாய்களுக்கு தினமும் உணவு அளிப்பவர்களுக்கு தடை விதிக்க பட்டதால், நேற்று முதல் அவைகள் உணவு இன்றி தவிந்துள்ளது. இது சம்பந்தமாக வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ் தலைவர் அசோக் ராஜிடம் உணவு அளிப்பவர்கள் முறையிட்டனர். அதன் பெயரில் அசோராஜ் ஓதியன்சாலை காவல் ஆய்வாளர் செந்தில் குமாரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். சூழ்நிலையை அறிந்து கொண்ட ஆய்வாளர் செந்தில் குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவலர்களை அனுப்பி அந்த பகுதி நாய்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்தார். இதனமூலம் பசியில் இருந்த நாய்களுக்கு உணவு கிடைத்ததுடன், தினமும் அவைகளுக்கு உணவு அளிப்பவர்களான வீர பாரதி, பிபு மற்றும் சஞ்சு பெருமூச்சு விட்டனர்.
English Summary
Chief Minister Rangasamy hosted a dinner for the Vice President at a private restaurant