அகமதாபாத் விமான விபத்து: இடிபாடுகள் இடையில் கிடைத்த 100 பவுன் தங்க நகைகள்...! போலீசிடம் ஒப்படைப்பு...
Ahmedabad plane crash 100 pounds of gold jewelry found wreckage Handed over to police
கடந்த 12-ந்தேதி குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலில் அருகிலிருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், விமானம் வெடித்து சிதறியதில், அதில் பயணம் செய்த 241 பேர், மருத்துவ கல்லூரி விடுதியிலிருந்த 5 மாணவர்கள், பொதுமக்கள் 24 பேர் என மொத்தம் 270 பேர் அநியாயமாக உயிரிழந்தனர்.

இதில்,விமானத்தில் பயணம் செய்த 'விஸ்வாஸ்குமார்' என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூபடேல் என்பவர் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் கட்டிடமிடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளிலிருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80000 ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நகைகள் ஆவணபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி தெரிவித்தார்.
English Summary
Ahmedabad plane crash 100 pounds of gold jewelry found wreckage Handed over to police