கணவருடன்.. பீச்சில் கண்ணாமூச்சி ஆடி.. தீர்த்துக்கட்டிய மனைவி.. பகீர் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை திருவான்மியூர் பீச்சில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தார். கதிரவன் என்ற பொறியாளர் கொலை செய்யப்பட்டார். 

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவி கூறிய போது, "நானும் எனது கணவர் கதிரவனும் கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம். அப்போது எனது தாலிச் செயினை கொள்ளையர்கள் படித்து சென்று விட்டதாக கூறினேன். 

அப்போது எனக்கு முன்னாள் காதலனாக இருந்த அந்தோணி ஜெகன் என்பவர் கணவரை அறிவாளால் வெட்டி கொலை செய்தார்." என்று தெரிவித்துள்ளார்.

அந்தோனியும், வினோதினியும் காதலித்து வந்த நிலையில் திடீரென்று மனைவி வினோதினிக்கு கதிரவனுடன் திருமணம் நடந்தது. 

திருமணத்திற்கு பின்னரும் தங்களது காதலை இருவரும் தொடர்ந்து வந்தனர். இந்த காதலுக்கு இடையூறாக கதிரவன் இருப்பார் என்று எண்ணியதால் அவரை கொலை செய்ததாக மனைவி வினோதினி தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அந்தோணி ஜெகன் மற்றும் வினோதினி இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai women killed husband for illegal affair


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->