இன்று முதல் "சென்னை பல்கலைக்கழக ஊழியர்கள்" தொடர் வேலை நிறுத்தம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தற்போது சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை பல்கலைக்கழகத்தின் 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 300 கோடி ரூபாய்க்கும் மேலாக வருமான வரி செலுத்தவில்லை என கூறி 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. 

இதனால் சென்னை பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை பல்கலைக்கழக ஊழியர்களின் டிசம்பர் ஜனவரி மாதங்களுக்கான சம்பளம் நிலுவையில் இருப்பதால் தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சம்பளமும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை சீர் செய்யக்கோரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அறிவித்து முன்னெடுத்துள்ளனர். பல்கலை கழகத்திற்கு பேராசிரியர்களும் ஊழியர்களும் வராததால் சென்னை பல்கலைக்கழக வளாகமே வெறிச்சோடி காணப்படுகிறது. 

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினால் மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai University staffs continue protest today onwards


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->