சென்னை | 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியில்  கணவரை இழந்த பெண் ஒருவர், 16,14 வயதுடைய இரண்டு மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

இந்த வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவருக்கு, இரண்டு முறை திருமணம் நடந்து, மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெங்கடேசனின் சகோதரி லலிதா, வாடகை வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் தங்களது மகளை எனது சகோதரனுக்கு கொடுக்க வேண்டும் என்று பெண் கேட்டுள்ளதாக தெரிகிறது. 

இதற்கு சிறுமியின் தாய் மறுப்பு தெரிவித்த நிலையில், வெங்கடேசன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து வெங்கடேசனின் சகோதரி லலிதா, தன்னுடைய ஆண் நண்பர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, சிறுமியை மிரட்டி பாலில் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு உடல்நலம் குறைவு ஏற்படவே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அவரின் தாய் அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வெங்கடேசன், அவரின் சகோதரி லலிதா, தாய் விஜயா, லலிதாவின் நண்பர் வெங்கப்பன் நான்கு பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள லலிதாவின் நண்பர்களான கிரி, பாலாஜி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thirumullaivayal minor girl abuse case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->