தென் தமிழக பகுதிகளில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், " அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌. கிழக்கு திசை காற்றலைகளின்‌ காரணமாக அடுத்துவரும்‌ நான்கு நாட்களுக்கு தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌.

அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில்‌ தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளைப்‌ பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 

காலை நேரங்களில்‌ லேசான பனி மூட்டமும்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்‌சியசும் பதிவாகலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Regional Meteorological Center Announcement 28 Jan 2021


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->