சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை நீடிக்கும்! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலையிலிருந்து பரவலான மழை பெய்து வருகிறது. 

இரவு 7 மணி முதல், சென்னை மற்றும் புறநகரங்களில் பலத்த மழை பெய்ததால், வெப்பம் குறைந்து சற்றே சற்றாக குளிர்ச்சியான சூழல் உருவானது.

குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி,ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி குமணன்சாவடி, கரையான்சாவடி, செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக, நகரப் பகுதிகளில் சில இடங்களில் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான அளவிலான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai rain update Heavy rain


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->