ரெட் அலர்ட் | அடுத்த மூன்று மணி நேரத்திற்கு... சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
Chennai rain alert 3hrs 24092023
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (செப்.24/ 9.10pm - 12.00pm) ஆற்காடு பகுதியில் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள அறிவிப்பில், ஆற்காடு, குன்றத்தூர், வாலாஜாபேட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் பல்லாவரம், தாம்பரம், திருத்தணி, அம்பத்தூர், அயனாவரம், மதுரவாயல், வண்டலூர் பகுதியில் மிதமான பழகி வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை முதல் வரும் 30.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
English Summary
Chennai rain alert 3hrs 24092023