நாளை முதல் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தம்! சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மெட்ரோ குடிநீருக்காக சுமார் 450 ஒப்பந்த லாரிகள் செயல்படுகின்றன. இவை 6,000 முதல் 18,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டவை. மாநகரின் குடிநீர் தேவைச்சுமையை ஏற்று வரும் இந்த லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன. ஆனால் அந்த ஒப்பந்தம் 2024 பிப்ரவரியிலேயே முடிவடைந்தது.

புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு 2024 நவம்பரில் வெளியானபோதும், இன்றுவரை ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஜூன்–ஆகஸ்ட் மாதங்களில் ஒப்பந்தம் முடியும் என்ற நம்பிக்கையில் பலர் புதிய லாரிகளை வாங்கியிருந்தனர். ஆனால் தற்போது, மாத தவணை, காப்பீடு செலவுகளை சுமந்து கண்ணீரில் காழ்ந்துள்ளனர்.

இதனை கண்டித்தும், ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யக் கோரியும், மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் அதிகாரிகளை சந்திக்கச் சென்றனர். ஆனால் அதிகாரிகள் ஒருவர் கூட இல்லை. இதையடுத்து செய்தியாளர்களிடம் சங்கத்தினர் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

“ஒப்பந்தம் இழுபறியாக உள்ளதால் பலர் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சிலர் அதற்காக உயிரிழந்தும் உள்ளனர்,” எனத் தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் தெரிவித்தனர். நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது நடைபெறுமாயின், சென்னை நகரத்தில் குடிநீர் விநியோகத்தில் கடும் தடங்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Metro drinking water Lorries strike


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->