தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட்! இந்த மாவட்ட மக்கள் கவனமா இருங்க! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகம் புதுவையில் அநேக மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை 13ஆம் தேதி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வருகின்ற 14, 15, 16 ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14ஆம் தேதி விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், 15 ஆம் தேதி செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது.

மேலும் 16 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி உருவாக்கி உள்ளது. இந்த வலியும் மண்டல கீழ அடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்க கடலில் வருகின்ற 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்து தமிழகத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai imd report heavy rain alert


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->