#BREAKING | தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
Chennai IMD Rain Alert 41222
டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மிக கனமழை வைப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டியதற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டிசம்பர் 8ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓர் இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிக மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai IMD Rain Alert 41222