#Chennai || காதலிக்க மறுத்த மாணவியை முகத்தில் வெட்டிய நாடகக் காதலன் கைது!! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் தொகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவி கனிஷ்கா நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது திடீரென ஒரு இளைஞர் மாணவியை வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். 

அதற்கு அந்த மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மாணவியின் முகம், தலை, கால் பகுதிகளில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஈச்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த வசந்த் என்ற நபர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரிய வந்தது. கடந்த சில வாரங்களாகவே மாணவியை வசந்த் தொந்தரவு செய்து வந்த நிலையில் நேற்று காதலிக்க மறுத்ததால் மாணவி கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வெட்டிவிட்டு தலைமறைவானார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் தலைமாறாக இருந்த வசந்தத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நாடக காதலன் வசந்தத்தை நீலாங்கரை அருகே வைத்து போலீசார் கைது செய்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai drama lover arrested for attack College girl


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->