தஞ்சை கால்நடை மருத்துவமனையில் சென்னை மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை.!
chennai doctor sucide in thanjavur Veterinary Hospital
சென்னையில் உள்ள மதுரவாயலில் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் பத்மநாதன் மகன் வசந்த்சூர்யா. இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரியில் படித்து கொண்டு ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வசந்த்சூர்யா நேற்று முன்தினம் சக பயிற்சி மருத்துவர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மருத்துவமனையில் தங்கி இருந்தனர். அவர்களில் சகா மருத்துவர்கள் இருவரும் மருத்துவமனையில் உள்ள அறையில் தூங்கி உள்ளனர். வசந்த்சூர்யா வெளியே உள்ள ஹாலில் படுத்துள்ளார்.
இதையடுத்து, வசந்த்சூர்யா நேற்று காலை மருத்துவமனையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் தூக்கு போட்ட நிலையில், பிணமாக தொங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வசந்த்சூர்யா படுத்திருந்த கட்டில் அருகே மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர் பயன்படுத்தி வந்த செல்போனை கைப்பற்றினர்.

அந்த செல்போனை கணினி நிபுணர்கள் மூலம் 'ஸ்கிரின் லாக்' திறக்கப்பட்டு செல்போனை சோதனை செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
English Summary
chennai doctor sucide in thanjavur Veterinary Hospital